இ.போ.ச மட்டக்களப்புச்சாலை முகாமையாளராக கந்தசாமி சிறிதரன் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்புச்சாலை முகாமையாளராக கந்தசாமி சிறிதரன் நேற்று புதன்கிழமை தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

2015 முதல் 2020 வரையான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்புச்சாலை பிரதி முகாமையாளராகவும் பின்னர் பதவியுயர்வு பெற்று இலங்கை போக்குவரத்துசபை கிழக்கு பிராந்திய நிர்வாக உத்தியோகத்தராகவும் பதவி வகித்து வந்த நிலையிலேயே  இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்புச்சாலை முகாமையாளராக  நிமிக்கப்பட்டுள்ளார்.