இ.போ.ச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

-பதுளை நிருபர்-

பிபிலையில் இருந்து லுணுகலை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் லுணுகலையில் இருந்து கொக்காகலை நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளி ஒன்றும் கைக்காட்டி சந்தி ( பாக்குவத்தை செல்லும் சந்தியில்) மோதுண்டு விபத்திற்குள்ளானது.

இதன்போது, 25,30 வயதுடைய 2 இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக, பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த உந்துருளியில் பயணித்தவர்கள் கொக்காகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் இருவரும் லுணுகலை பிரதேசத்தில் ஆலயம் ஒன்றில் உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளியும், பேருந்தும் லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.