இலங்கை வருகிறார் சின்டி மெக்கெய்ன்

இலங்கை வருகிறார் சின்டி மெக்கெய்ன்

ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் சின்டி மெக்கெய்ன் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் அந்நாட்டுடன் தற்போதுள்ள பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்காக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் உள்ள உதவி நிறுவனங்களைச் சந்திப்பதுடன், அமெரிக்க நிதியத்தினால் நடத்தப்படும் மனிதாபிமான உதவித் திட்டங்களின் பயனாளிகளையும், பாடசாலைகள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் சமூகத்தின் முன்பாக அவற்றைச் நடைமுறைப்படுத்துபவர்களையும் சந்திப்பார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.