இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவர் ரஞ்சன் ஜயலால் உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு வளாகம், மத்திய வங்கி மற்றும் கல்லுமுவதொர வளாகங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாத வகையிலும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும் போராட்டத்தை முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.