இலங்கை வலுவான ஜனநாயக கொள்கையை கொண்டுள்ள நாடு என்ற போதிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்த மட்டத்திலேயே உள்ளது என நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பாக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை வெகுவிரைவில் மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் விதமான சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இருந்த போதும், ஜனநாயக நாடொன்றில் மக்களின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.