இலங்கையில் ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது இளவரசி ஆனியின் இலங்கை விஜயத்துடன் இணைத்து ராணி எலிசபெத்தின் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மகளான இளவரசி ஆனி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து, பாட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பட்ட விக்டோரியா அணையை பார்வையிடவுள்ள நிலையில் அந்த இடத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சிலையை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான ஏற்பாட்டுடன் அங்கு நிர்மாணிக்கப்படும் நிர்மாணப் பணிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அங்கு கண்காணிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.