
இலங்கைக்கு வருகைத் தரும் சீனப்பிரஜைகளுக்கான அறிவிப்பு
இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து சீன பிரஜைகளும் இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் சீன பிரஜை ஒருவர் இரண்டு கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் பிரவேசித்ததாகக் கூறப்பட்டது
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சீன தூதரகம் வர்த்தகம்இ கல்விஇ தொழில் மற்றும் சுற்றுலா போன்றவற்றிற்காக இலங்கைக்கு வரும் அனைத்து சீன பிரஜைகளும் ‘இலங்கையின் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும் , இலங்கையில் கடைப்பிடிக்கப்படும் மத மற்றும் கலாசார பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும் என்றும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு கடவுச்சீட்களுடன் இலங்கை வந்த சீனர் தொடர்பில், உரிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்