இலங்கைக்கு உதவுவதாக பிரித்தானிய பிரதமர் உறுதி

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையில் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போயை நிலைமை குறித்து போரிஸ் ஜோன்சனுக்கு விளக்கமளித்ததாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கும், நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதற்கும் இலங்கைக்கு உதவுவதாக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்ததாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.