இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்த மகன் கைது

இரத்மலானையில் நேற்று வியாழக்கிழமை காலை இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்று, தாயாரை காயப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர் தனது பெற்றோரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த தாய் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.