இரண்டு வாகனங்களுடன் கார் மோதி விபத்து: சிறுவன் படுகாயம்

நானுஓயா பிரதான வீதியில் நேற்று சனிகிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் சிறிய காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்று நானுஓயா பிரதான நகரில் வீதியிலுள்ள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுடன் மோதியுள்ளது. இதில் லொறியும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளதுடன் லொறியில் அமர்ந்திருந்த சிறுவன் காயங்களுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்