இது வரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் அதி கூடிய டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதத்தில் 5 ஆயிரத்து 397பேராகப் பதிவாகியுள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில் 1,826 நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 725 நோயாளர்களும பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொழும்பு மாவட்டத் தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதி வாகியுள்ளனர்.

அதற்கமைய 1,433 பேர் கொழும்பு மாவட்டத்திலும் கம்பஹா மாவட்டத்தில் 93 பேரும யாழ்ப். மாவட்டத்தில் 83 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருநாகலில் 761 பேரும் புத்தளத்தில் 538 பேரும் களுத்துறையில் 499 பேரும், காலி மாவட்டத்தில் 456 பேரும் பதிவாகியுள்ளதாக என்றும் தொற்று நோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.