அஷு மாரசிங்க ஹிருனிகா மற்றும் ஆதர்ஷாவிடம் இருந்து 1.5 பில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஷுமாரசிங்க, தமக்கு எதிராக அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறி முறையே 500 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷ கரந்தன ஆகியோரிடமிருந்து ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

ஹிருணிகா மற்றும் ஆதர்ஷா ஆகிய இருவரையும் 14 நாட்களுக்குள் நஷ்டஈடாக 1.5 பில்லியன் ரூபாவை செலுத்துமாறு வலியுறுத்தி, சட்டத்தரணி மலின் ராஜபக்ஷ ஊடாக இந்தக் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

பேராசிரியர் ஷு மாரசிங்க நாயொன்றை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் காணொளிப் பதிவை ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு வெளியிட்டதை அடுத்து அது வைரலாகியுள்ளது.

ஊடகங்களுக்குக் கூறப்படும் அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்றும் உண்மையை திரிபுபடுத்துவதாகவும் தனது கட்சிக்காரரால் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக, சட்டத்தரணி மலின் ராஜபக்ச தெரிவித்தார்.