அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க தேவையில்லை

அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை வெள்ளிக்கிழமை கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை, என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

தற்போதைய கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் தெரிவித்தார்.

மேலும், அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை எனவும்,

இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குரிய செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் தேட வேண்டியுள்ளது.

உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், அதனை முன்னதாகவே அறிந்து  அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது, என்றும் பிரதமர் தெரிவித்தார்.