அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான தானியங்கி கட்டண செலுத்தும் முறைகள் (Automated Payment Systems) இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறைகள் (Procurement process) அடுத்த சில வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி கட்டண முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்களில் (Toll gates) ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்றும், பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.