
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 15,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 75 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்