மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,694 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.எனினும் ஏப்ரல் மாதத்தில் 2,755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 2.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியினது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இடமாற்று வசதியும் அடங்கியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்