மட்டக்களப்பில் மான் இறைச்சியை கடத்திய இருவர் கைது

செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை மான் இறைச்சி கடத்திய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கலடி பிள்ளையார் கோவில், பங்குடாவெளி பிரதேசங்களை 32, 44 வயதுடையவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பாலத்தில் சம்பவதினமான இன்று பகல் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதன்போது கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்தை நோக்கி பிரயாணித்த சிறிய பட்டா வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மறைத்து கடத்தி கொண்டு செல்லப்பட்ட 20 கிலோ மான் இறைச்சி மீட்டகப்பட்டுள்ளது.

இதன்போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க