மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்க தயார்

‘மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தயார்’, என்று முன்னாள் பிரதமரும் தற்போதைய எம்.பி.யுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைய ஒட்டுமொத்த அரசாங்கமும் விலக வேண்டும். மக்கள் உண்மையில் என்னை விரும்பினால், இடைக்கால அரசாங்கத்துக்கு குறுகியக் கால தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராகவே இருக்கிறேன்.

தற்போதைய நெருக்கடி நிலைமைகளை ஒன்றரை வருடங்களுக்குள் தீர்க்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.