துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர்: மக்களிடம் உதவி கோரிய பொலிஸார் (CCTV காணொளி இணைப்பு)

யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார்.

அந்தவகையில் நேற்றையதினம் தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

எனவே குறித்த முதியவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்