
சொகுசு வீட்டில் இயங்கிய சட்டவிரோத விடுதி: 3 பேர் கைது
கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு பெண்கள் உட்பட மூவர் கண்டி பொலிஸாரால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்