காத்தான்குடியில் தீ பற்றி எரிந்த கடை: பல கோடி நஷ்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை வர்த்தக நிலையம் ஒன்று தீப்பறி எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பாதணி விற்பனை நிலையத்திலேயே குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகிய நிலையில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நஷ்ட விபரங்கள் இது வரை கணக்கிடப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்