
இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் மூன்றாம் கட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் கடந்த 12ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 09ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்