ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் நில அதிர்வுகள்!

ஆப்கானிஸ்தானில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது பாகிஸ்தான் மற்றும் வட இந்தியா முழுவதும் சிறிய அளவிலான நில அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் டெல்லி பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

பாகிஸ்தானில், இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் 130 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் பாதிப்புகள் குறித்து உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை