
பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வி
-கிண்ணியா நிருபர்-
மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியும் கலைவிழாவும் நூல் வெளியீடும் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
காலை சுப நேரத்தில் மடைப்பெட்டி அருள்மிகு பாட்டாளிபுரம் விநாயகர் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டது.
அதன்பின்னர் விசேஷ அபிசேக, அலங்கார பூஜைகள் அருள்மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீபத்திரகாளி அம்பாளுக்கு நடைபெற்றது .
கலை இலக்கியவிழாவில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
மாலை நிகழ்வில் ஊடக கலை இலக்கிய ஆன்மீக செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
ஊடகத்துறையில் அரசரெத்தினம் அச்சுதன் கெளரவிக்கப்பட்டார்.
ஆலயத்தின் பிரதான. செயற்பாட்டாளர் பொ. சற்சிவானந்தம் தலைமையில் ஆலயத்தின் பூஞ்சோலையாள் வரலாற்று நூல் வெளியீடும் இடம் பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீமிதிப்பு இடம் பெற்று பொங்கல் விசேஷ பூஜை நிகழ்வுகள் நிறைவடைந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்