திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் விவாகரத்து செய்த தம்பதி

துபாயில் ஒரு தம்பதி மிகவும் குறுகிய நேரத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நீதிபதி முன்னிலையில் திருமணத்தை முடித்துக் கொண்ட தம்பதி, அங்கிருந்து வெளியேறினர். அப்போது, படிக்கட்டில் நடந்து வந்த மணப்பெண் கால் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, கை கொடுத்து தாங்குவதற்கு பதிலாக மணமகன் சொன்ன வார்த்தையால் மணப்பெண் அதிர்ந்து போனார். அதாவது, மணமகள் கீழே விழுந்ததும், அவரைப் பார்த்து, ”முட்டாள், பார்த்து நடக்கமாட்டாயா?” என்று கேட்டதுதான் மணப்பெண்ணுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே இவ்வாறு அவமரியாதை செய்யும் கணவர், எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்வாரோ என்று நினைத்த மணமகள் உடனடியாக நீதிபதியை அணுகி, தனக்கு விவாகரத்து தருமாறு கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதியும் விவாகரத்து கொடுத்ததால், திருமணம் முடிந்து வெறும் 3 நிமிடங்களில் அந்த பந்தம் முடிவுக்கு வந்தது.

இது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதில் பலர், ‘மரியாதை இல்லாத திருமணம் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்துவிட்டது’ என தெரிவித்துள்ளனர். இது போன்ற நபர்களை விட்டுவிடுவது பெண்களின் வாழ்க்கைக்கு முக்கியமானது என்றும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்