பருத்தித்துறை பொலிஸாரால் இருவர் கைது

-யாழ் நிருபர்-

நேற்று செவ்வாய்கிழமை இரவு மின்துண்டிப்பு வேளையில், பருத்தித்துறை பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது பெண்களுக்கு இடையூறு செய்த இருவர் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்த பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலமையில் இவ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பொலிஸார் இவ்வாறான கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை பொலிஸாரின் இவ் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.