திருகோணமலையில் ஆடு தகராறு : மண்வெட்டியால் தாக்குதல்
-திருகோணமலை நிருபர்-
ஆட்டை வயலுக்குள் அனுப்ப வேண்டாம் எனக் கூறியவருக்கு மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய சம்பவமொன்று திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயலுக்குள் ஆடு மேய்ந்து கொண்டிருந்த நிலையில், வயலின் உரிமையாளர் ஆட்டின் உரிமையாளரிடம் ஆட்டை தன்னுடைய வயலுக்குள் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதன் போது, ஆட்டின் உரிமையாளர் வயலின் உரிமையாளரை மண் வெட்டியால் தாக்கியதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட நபர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கை உடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அங்கு பெறப்பட்ட XRAY மூலம் கை உடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் நொச்சிக்குளம்- சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் ராஜேந்திரன் (65வயது) பொலிஸார் தெரிவித்தனர்.
மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய குறித்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.