ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருகோணமலை பட்டதாரிகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று திருகோணமலையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை துறைமுக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை வீதியில் இருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவணியாக சென்றது.

இதன்போது பேச்சு வார்த்தை போதும், இனி நியமனத்தை வழங்கு உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் கடும் வெயிலில் பலர் குழந்தைகளுடன் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை கிழக்கு ஆளுனர் செயலக முன்றலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் அத்துடன் ஆளுநர் செயலகத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் மஹஜரும் கையளித்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்