காதல் விவகாரம் : ஆணொருவர் தீக்குளித்து உயிரை மாய்ப்பு

பொலன்னறுவை – மெதிரிகிரிய நகர பொது விளையாட்டரங்கில் ஒருவர் உடலில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவை – லங்காபுர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய கொத்தனார் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதல் உறவு பிரச்சினையில் இந்த தீக்குளிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.