வாகன இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்

வாகன இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

வாகன இறக்குமதி பற்றிய இக் கலந்துரையாடலின் போது “வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால் மேற்கொள்ள முடியாது எனவும் அதனை நிதியமைச்சே தீர்மானிக்க வேண்டும்” என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்ததாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே குறித்த செயற்பாடுகள் நிதியமைச்சின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் எதிர்காலத்தில் நிதியமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்