குவைத்தில் இலங்கைப் பெண் துன்புறுத்தல்

குவைத்தில் இலங்கைப் பெண் துன்புறுத்தல்

குவைத்தில் உள்ள இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் இது தொடர்பில் யாரும் கவனம் செலுத்தவில்லை, பெண் அநாதரவாக விடப்பட்டுள்ளார்.

குவைத்தில் சுமார் 4 வருடங்களாக வீடொன்றில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்துவந்த பெண் ஒருவரை அந்த வீட்டின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது இரண்டு மகன்களால், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உடல் மற்றும் தலையில் தாக்கப்பட்டு வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி இதை எந்த வகையிலும் பொலிஸாரிடம் சொல்ல வேண்டாம் என்று கூறி வாகனத்தில் ஏற்றிச்சென்று ஓரிடத்தில் தன்னை கைவிட்டுச் சென்றதாகவும் தாக்குதலுக்கு உள்ளான பெண் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரது இலங்கை நண்பர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், இது தொடர்பில் குவைத் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகமோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்