திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- 10ம் கட்டை ,  கட்டுக்குளம் பகுதியில் யானை தாக்கிய நிலையில் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

வெல்கம் விகாரை பகுதியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் வயலுக்குச் சென்ற பொது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக  தெரிய வருகின்றது.

இதன்போது திருகோணமலை-அனுராதபுரம் வீதி -வெல்கம் விகாரை பகுதியைச் சேர்ந்த மாதர ஆராச்சிவிதானகே ஹரிச்சந்ர (53வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக  மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.