உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாளாந்த மின்வெட்டு காரணமாக பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால்,  இந்தக் காலகட்டம் படிப்பில் அதிக கவனம் செலுத்தும் காலம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இம்மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் 2200 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சை மிக அருகில் உள்ளதால், இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு குறித்து அதிகாரிகள் சற்று கவனம் எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.