மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம்!

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் தீர்மானம்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், பேராசிரியர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்