
நுளம்புகளுக்கு உணவு வழங்கிய விசித்திர மனிதர்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெரஸ் ரோஸ் என்ற நபர் நுளம்புகளுக்கு இரத்த தானம் செய்துள்ளார்.
சமீப காலமாக நுளம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இவர் நுளம்புகளுக்கு உணவு வழங்குவதாகக் கூறி தனது இரத்தத்தை குடிப்பதற்கு அனுமதித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது உலகின் மிகச்சிறந்த உணர்வு எனவும் தனது ஆய்வின் மூலம் நுளம்புகளைப் பற்றி உலகம் அறிந்து கொள்ளும் எனவும் பெரஸ் ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்