கொழும்பு பங்குச்சந்தையின் (CSE) இன்றைய தினத்திற்கான முற்பகல் வர்த்தக நடவடிக்கைகள், எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேலும் தாமதமடைந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வழமையாக வர்த்தகம் தொடங்குவதற்கு முன்னர் நடத்தப்படும் “தொடக்க ஏல அழைப்பு” (Opening Auction Call) முறையானது, இந்தத் தொழில்நுட்பப் பிழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.