திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு: ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மீசாலை கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த வியாழக்கிழமை காணாமல் போனதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், மோட்டார் சைக்கிள் காணாமல் போன பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அல்லாரை என்ற இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டதுடன் மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேகநபரையும் கைது செய்தனர்.

மேலும் சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்