புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி இம்மாதம் முழுவதும் நாடாளவிய ரீதியில் இணைப்பாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அணியின் செயல் திட்டங்களை நாடாளவிய ரீதியில் விஸ்தரிக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என நிறுவனர் ராதாமேத்தா தெரிவிக்கிறார்.
இம்மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படும் இச் செயற் பணியில் தற்போது வரை அநுராதபுரம், கண்டி, நுவரேலியா, கம்பஹா, ஹட்டன் மாவட்டங்களுக்கு இணைப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏனைய மாவட்டங்களை சேர்ந்தோர் இதில் இணைந்து கொள்ள விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இணைய விரும்பும் பெண்கள் மேலதிக விபரங்களைப் பெற 075 4880172என்ற வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.