பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற பாடசாலை மாணவி: வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்-

பாடசாலை மாணவி இன்று செவ்வாய் கிழமை மோட்டார்சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பெல்காத்தனையில் இருந்து பசறை நகர் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பசறை சதொசவிற்கு முன்பாக இருந்த பாதசாரிகள் கடவையில் கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி மீது காலை 6.45 மணியளவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 12 வயதுடைய பாடசாலை மாணவியும் 25 வயதுடைய பெல்காத்தனை பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றுவற்தகான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172