பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

2022 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற தமிழ் – சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.