
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் சஞ்சிகை வெளியீடு
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலய சுற்றாடல் முன்னோடி கழகத்தினால் சுற்றாடல் சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டது.
பாடசாலையின் முதல்வர் திருமதி ஜெ.மாணிக்கவாசகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் மகேஸ் ரல்தொட்ட கலந்து கொண்டு குறித்த சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார்.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த சஞ்சிகையானது பாடசாலை மாணவர்களின் சூழல் சார்ந்த ஆக்கங்களை தாக்கி காலாண்டு சஞ்சிகையாக வெளி வரவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்