பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமான போது, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை கருப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வௌியிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 27 பேரின் மரணத்திற்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர் இவ்வாறு கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.