-கிண்ணியா நிருபர்-
தற்போது இடம் பெற்று வரும் சிறுபோக செய்கைக்கான நெற்செய்கையை அடுத்து, இயந்திரம் மூலமான தரையை சமப்படுத்தும் நடவடிக்கை திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு விவசாய பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன.
தம்பலகாமம் வயல் நிலப் பகுயில் நிலத்தை சமப்படுத்தும் வயல் பகுதியில், புதிய வகை கொக்கு இன பறவைகள் அதிகமாக வருவதனை அவதானிக்க முடிகிறது.
இதில் மஞ்சல், வெள்ளை நிற வகை கொக்கு இனங்களும், வெளிநாட்டு இன வகையை சேர்ந்த பறவைகளும் குறித்த பகுதிகளை நோக்கி வருகை தந்துள்ளன.