கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில், இன்று திங்கட்கிழமை, எரிபொருள் பரிசோதனையின் போது மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளே, இவ்வாறு திடீரென தீப்பற்றி முற்று முழுதாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
பிரதேச சபையின் உறுப்பினர்கள் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, திடீரென தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.