கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று இரவு எரிவாயு சிலிண்டர் ஏற்றிய வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் மோட்டார் சைக்கிளிலில் இருவர் பயணித்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றையவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.