பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கப் பால்

பாராளுமன்ற அமர்வினை பார்வையிட வரும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கப் பால் வழங்க பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.

இந்த பிரேரணையை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 500 மாணவர்களுக்கு பால் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.