பால்மா தொடர்பில் புதிய சர்ச்சை

துறைமுகத்தில் உள்ள பால் மாவை முதலில் விடுவித்து, கையிருப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 04 இலட்சம் கிலோகிராம் பால் மா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அண்மைக்காலமாக கையிருப்பு பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட 04 இலட்சம் கிலோகிராம் பால் மா பாவனையற்றதாக மாறியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்த கருத்தை நிராகரிப்பதாக சுங்கத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக சங்கத்தின் தலைவரின் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் 06 கொள்கலன்கள் கடந்த 14ஆம் திகதி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.