இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து, அவர் டெல்லியில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்நாட்டு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.