ஐஸ் கிறீம் வாங்க பக்கத்து வீட்டில் திருடிய சிறுவர்கள்

 

அளவத்துகொடை பொலிஸ் பிரிவில் உள்ள சைஸ்ட்டன் தோட்டப் பகுதியில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே நேற்று வியாழக்கிழமை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் இரு சிறுவர்களும் அயல் வீடு ஒன்றில் வீட்டார் இல்லாத நேரத்தில் பின் பக்கம் கதவை உடைத்து உட்புகுந்துள்ளனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்கள் சிலவற்றை திருடி உள்ளனர்.

பின்னர் அதில் ஒரு மின் உபகரணத்தை 300 ரூபா பணத்திற்கு விற்பனை செய்துள்ளனர். அந்த உபகரணத்தின் உண்மைப் பெறுமதி 3,650 ரூபாவாகும்.

விற்பனை செய்து கிடைத்த 300 ரூபா பணத்திற்கு வடையும், ஐஸ்கிறீமும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். மற்றும் உபகரணங்களை பக்கத்தில் உள்ள ஒரு புதரில் எறிந்துள்ளனர்.

வீட்டார் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து திருடப்பட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

திருடப்பட்ட மின் உபகரணம் ஒன்றை 300 ரூபாவிற்கு வாங்கிய நபரும் சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.