இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கவிலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 2,000 ரூபாயால் அதிகரித்து 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 4,000 ரூபாயால் அதிகரித்து 362,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.